photo

photo
Venkatesh.A.S

Thursday 17 October 2013

Moola Nakshathra (மூல நட்சத்திரம்)



மூலமும் மாமனாரும்


என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர்  கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த பதிவை வெளியிடுகிறேன். இதனால் அவர் வாழ்க்கையில் உள்ள பிரச்சனை தீரும் என நம்புகிறேன்.  


உலகில் மூட நம்பிக்கை இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம். தற்போதைய கைபேசி சமுதாயத்தில் நிறைய பேர் இன்னமும் மூட பழக்கங்களில் முட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர். சில பேர் மூடப்பழக்கம் என்றால் என்ன என்று கேள்வி கேட்டு பெரும் பகுத்தறிவுவாதியாக தன்னை காண்பித்து கொள்வார். என்னை பொறுத்தவரை மூடப்பழக்கம் என்பது "தவறான புரிதலால்" வருவது. எல்லாவற்றிலும் நாம் சரியானதையே புரிந்து கொள்ளவேண்டும் என்று ஆழமான எண்ணம் நமக்கு இருந்தால் மூடப்பழக்கம் நமக்கு வராது.

******************

லக்கினம் முதல் மற்ற வீடுகள் அனைத்தும் மிகவும் நல்ல நிலையில் இருக்கும் அமைப்பை பெற்ற  ஜாதகி மிகவும் நல்ல குணங்களும் , யோக அமைப்பை பெற்றவராகவும் இருப்பார், மூல நடசத்திரம் என்ற ஒரே காரணத்திற்க்காக , ஜாதகியை தவிர்ப்பது முற்றிலும் தவறான அணுகு முறை .

ஒரு ஜாதகத்தில் நன்மையான, தீமையான  பலன்களை தருவது பாவகம் எனும் பனிரெண்டு வீடுகளே , நட்சத்திரமல்ல என்பதை உணருங்கள் , நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தாலும் , பாவகங்கள் நல்ல நிலையில் இல்லை எனில் வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்பதே உண்மை , நட்சத்திரத்தை வைத்து ஒரு ஜாதகத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை , இதனால் தம்பதியரின் வாழ்க்கை பாதிக்க படுமே அன்றி எவ்வித நன்மையையும் இல்லை.

உண்மையில் மூல நட்சத்திர  பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நபரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பதெல்லாம், முற்றிலும் பிற்போக்கு தனமான வாதம், பொதுவாகவே மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்கள் அதி புத்திசாலிகளாக இருப்பார்கள் காரணம் கேதுவின் நட்சத்திரம் அல்லவா இயற்கையாக இவர்களுக்கு புத்திகூர்மையும் அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும் அமைந்து விடும் , பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு சொல்வதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதே உண்மை காரணம்,  இந்த மூல நட்சத்திரம் உபய ராசி தனுசுவில் அமர்ந்து நெருப்பு தத்துவத்தை பெறுவதே இதற்க்கு காரணம்.

உபய ராசி : மற்றவர்களுக்கு பிரதி பலன் பாராமல் உதவி செய்யும் குணம் ,சுய கட்டுப்பாடு கொண்டவர்கள் பரந்த மனப்பான்மை கொண்ட உள்ளம் பெற்றவர்கள்.
உபய நெருப்பு தத்துவம் : இருளில்  வெளிச்சம் தரும் மெழுகு வர்த்திக்கு இணையாக ஒப்பிடலாம் இவர்களை. இவர்களின் வேகமாக சிந்திக்கும் ஆற்றல் மற்றவர்களின் இருளடைந்த வாழ்க்கையில் வெளிச்சத்தை காட்டும் , ஆனால்  மெழுகு வர்த்திக்கு எவ்வித பயனும் இல்லை.

 
இந்த மூல நட்சத்திர பெண்ணை மணந்து வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு  தனது புத்தி சாலி தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவர் , நிர்வாக திறமையும் அதிகம் உண்டு,  எனவே இதுவரை குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்லும் பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் மாமனார் ஏற்றுகொள்ள மறுப்பார் காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்ற பிற்போக்கு எண்ணமே.

 இந்த இடத்தில் தான் மாமனாருக்கும் , மருமகளுக்கும் ஆகாமல் போய் விடுகிறது , இதை ஜோதிடர்கள் மிகை படுத்தி மூல நட்சத்திரம் என்றாலே மாமனாருக்கு ஆகாது என்ற வதந்தியை பரப்பி விட்டு விட்டனர் என்பதே உண்மை,  மக்களும் ஜோதிடர்கள் சொல்வதே வேதவாக்காக எடுத்து கொண்டு,  முலம்  மற்றும் இது போன்ற ஆகாத நட்சத்திரம் என்று சில ஜோதிடர்கள் குறிப்பிடும் நட்சத்திரம்,  பெற்ற பெண்களை ஒதுக்கி தள்ளி விடுகின்றனர்.  இதனால் இந்த நட்சத்திர அமைப்ப கொண்ட பெண்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்கு உரியது என்பதே உண்மை, மக்கள் இனியாவது வழிப்புணர்வு கொள்வார்களா ?   

  எந்த ஒரு ஜோதிட நூல்களிலும்  மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது , மாமனாரின் உயிருக்கு ஆபத்து , என்று குறிப்பிட பட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவில்லை , அப்படி இருப்பின் தயவு கூர்ந்து எங்களது ஜோதிட தீப மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .
 
ஆக இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்வது ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நட்சத்திரம் அல்ல சுய ஜாதாகமே என்பதே முற்றிலும் உண்மை .

 
“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம” என்று கூறுகிறார்களே. மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற உணர்வை இந்தப் பழமொழி ஏற்படுத்துகிறதே? இதன் உண்மையான உள் அர்த்தம்தான் என்ன?
பதில்: பழமொழி காலப்போக்கில் மருவி புதுமொழியாக மாறியதற்கு நீங்கள் கூறிய பழமொழியே உதாரணம். ஏனென்றால் “ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம” என்பதுதான் உண்மையான பழமொழி.அதாவது ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சௌபாக்கியங்கள் கூடி வரும். ஏனென்றால் ஆனி மாதத்தில் சூரியன் மிதுனத்திலும், சந்திரன் தனுசு ராசியிலும் இருக்கும். ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் பௌர்ணமி நாளாக அமைந்து விடுகிறது.
எனவே அவர்கள் ஏதாவது கலை/வித்தையில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அதனைக் கொண்டு மற்றவர்களை ஆளுதல் அல்லது மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடித்தல் போன்றவற்றைப் பெற்றவர்களாக இருப்பர். இங்கே “ஆளுதல” என்ற வார்த்தையை அரசு பதவி என்று கொள்ளக் கூடாது.உதாரணமாக கூற வேண்டுமென்றால், ஒரு நடிகர் குறிப்பிட்ட மாநில மக்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளார் என்று கூறுக் கேட்டிருக்கிறோம். அது போல் பிறர் மனதில் இடம்பிடிப்பதைத்தான் இந்தப் பழமொழியில் அரசாளுதல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால்தான் ஆனி மூலம் அரசாளும் எனக் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அடுத்ததாக பின் மூலம் நிர்மூலம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்கள் எதிரிகளை வீழ்த்தக் கூடியவர்களாக இருப்பர். எனவே அதனைப் “பெண் மூலம் நிர்மூலம” எனக் கூறுவது தவறு. நிர்மூலமாக்குதல் என்றால் எதிரியை இருந்த சுவடு தெரியாமல் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். இந்த சக்தி மூலம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்களுக்கு இருக்கும். அதற்கு காரணம், அவர்களின் நவாம்சத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பார். அதனால்தான் எதிரிகளை அழிக்கும் வல்லமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆண்/பெண் என்ற பேதம் கிடையாது 

******************

நன்றி :  
http://jothidadeepam.blogspot.in/2012/06/blog-post_1098.html ftp://tamil.webdunia.com/articles/0902/07/1090207069_1.htm

3 comments:

  1. உங்களின் பதிவிற்கு மிகவும் நன்றி, ஏனெனில் உங்களின் இந்த பதிவினால். என் காதல், திருமண பொருத்தம் கூடுமான வரை இருந்தும், ஜாதகர் மூல நட்சத்திரம் என்ற உடனே பிற்போக்குதனமாக வேண்டாம் என்று கூறிவிட்டார், அதையே என் பெற்றோரும் வேத வாக்காக ஏற்றுக்கொண்டனர். தற்போது உங்கள் பதிவை என் பெற்றோரிடம் மேற்கோள் காட்டி காதலை திருமண நிலைக்கு உயரத்தி காதலில் வெற்றி அடையப்போகிறேன்.

    உண்மை காதல் வென்றாக வேண்டும்
    உண்மை தோற்காது..,

    மிகவும் நன்றி..,

    ReplyDelete
    Replies
    1. இப்போ திருமணம் முடிந்ததா????

      Delete
  2. மூலநட்சத்திர 1ம் பாதம் உள்ள பெண்ணை மணந்தால் அது மாமனாரின் உயிரை கண்டிப்பாக எடுத்துவிடும்

    ReplyDelete