photo

photo
Venkatesh.A.S

Tuesday 24 September 2013

Rahu- Ruler for Past Karma (ராகு- பூர்வ புண்ணிய வினை கர்த்தா)


ராகுவின் விஷ (ம) த்தனம் ! 





ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் ,  ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு  நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார்.  அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... 

அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று..

உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது  ராகு தசை  உங்களுக்கு நடக்கும். 

 விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் - அவருக்கு உரிய தேவதை முருக கடவுள்..... 
மகம் நட்சத்திரம் - அதிபதி - கேது  - தேவதை  : விநாயக பெருமான். ராசி : சிம்மம். ராசி நாதன் - சூரிய பகவான். 

நடக்கும் தசை - ராகு - அதி தேவதை - துர்க்கை அம்மன். 


உங்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் .... உடனடி தீர்வு கிடைக்க , வாழ் நாள் முழுவதும் , செவ்வாய் கிழமைகளில்  நீங்கள் முருக கடவுளுக்கு பாலாபிசேகம் , பாத யாத்திரை சென்று வர மலை போல் வரும் பிரச்னை கூட தூள் தூளாகும்.....

தினமும் காலை - சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள். சூரிய பகவானை நீங்கள் வரவேற்க வேண்டும். அவர் உங்களை வரவேற்க கூடாது..  
அன்றாடம் நீங்கள் விநாயகரை வணங்கி வேலையை தொடங்குவது நல்லது.. 
உங்களால் விநாயகர் கருணையை மனதார உணர முடியும்... 

(அஸ்வினி, மகம். மூலம் நட்சத்திரம் இவற்றில் பிறந்தவர்கள் உங்களை அறியாமல் நீங்கள் , விநாயகரை வணங்கினாலும் உங்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பதை உணர்ந்து இருப்பீர்கள்..  )

இப்போது நடக்கும் தசை ராகு தசை. .. ராகு என்ன செய்யும்? ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

ராகு அப்படி என்னதான் செய்யும்..? புலன் ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகு ஜன தொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent )  என்று அனைத்துக்கும் அதிபதி. ... உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பணவரவு இருக்கும்.. நோகாமே நோன்பு எடுக்கலாம். . நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. பணம் கொழிக்கும்..( நல்லது தானே..!)

அதே நேரத்தில் பெண்களால் சர்வ சாதாரணமாக பிரச்சினைகள் வரும்... நீங்களே ஒதுங்கி இருந்தாலும் .. உங்களையே தேடி வருவார்கள்... உங்களால் 'பலான' விசயங்களில் இருந்து ஒதுங்க முடியாது.. பெண்களிடம் செல்ல வேண்டி வரும்.. அல்லது குறைந்த பட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர்  என்று படம் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி வரும்...  இப்படி நீங்கள் இருக்கும் போது ... வரும் பெண்களும் உங்களுக்கு பேரழகியாக தெரிய வரும்.. விட முடியுமா...??  வரை முறை தெரியாத அளவுக்கு விளையாட்டு தொடரும்.. பிறகு என்ன... வீட்டில் தெரிய வர.. அதனால் தொல்லைகள் வர... கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை பூதாகரமாகி வழக்கு, கோர்ட், விவாக ரத்து.. ... ஈஸ்வரா...!! 

கேட்ட நேரம் இருக்கும் வரை ... அந்த ஒண்ட வந்த பிடாரி  தான் உங்களுக்கு அவ்வளவு உசத்தியாக தெரியும்... அவளுக்காக நீங்கள் சகலத்தையும் துறக்க தயார் ஆகி விடுவீர்கள்..  உங்களுக்கு அது  ஒரு சொகுசான வாழ்வு என்று தோன்றும்.. ஆனால் மகா கேவலமான வாழ்வு என்று தோன்றாது.. 

இதில் கோட்சார ரீதியாக ராகு ஜென்மத்தில் வந்தாலோ ... இன்னும் நிலைமை அசிங்கமாகும்.. நீங்கள் இருக்கும் ஊரில், அல்லது தெருவில் அல்லது , உங்கள் குடும்ப வட்டாரத்தில் ... நீங்கள் ஏதாவது ஒரு பெண் விஷயத்தில் அசிங்கப்பட்டு , தலை குனிய வேண்டி வரும்... 

இல்லையா... கோடிகளில் புரள வைத்து விட்டு , திடீர் என்று அதல பாதாளத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்.. 
 
இது பொதுவான பலன். ஆனால் 10 க்கு  9 பேருக்கு இது பொருந்தும். 


இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது..  அவர்கள் அமர்ந்த வீடு, (நட்பு , பகை) நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும்  கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் ,  என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

எந்த ஒரு மனிதனுக்கும், ராகு, கேது தசை நடக்கும் போது , அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் ... அட்சர சுத்தமாக கிடைக்கும்..  
 சில குழந்தைகளுக்கு ராகு தசை நடந்தால், அதன் பலன் மொத்தமும் பெற்றோர்களுக்கு நடக்கும்... 
  

 நல்லதும் உண்டு.. கெட்டதும் உண்டு...   ஐயா.. போன ஜென்மத்திலே எப்படி இருந்தேன் னு தெரியலை.. இந்த ஜென்மத்திலே என்ன பண்றது...? நான் தப்பு பண்ணக் கூடாது.. என்ன வழி..? 
இந்த கேள்வி உங்களுக்கு தோணுவதற்கே   நீங்க பண்ணின ஒரு புண்ணியம் தான் காரணமாக இருக்கும்.. 

ராகுவுக்கு  அதி தேவதை துர்க்கை.  ராகுவுக்கு தனியாக கிழமை கிடையாது..  தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.. ராகு காலம் என்று காலண்டரில் போட்டு இருப்பார்கள்...  இந்த ஒன்றரை மணி நேரத்தில் , நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் சென்று விடுங்கள்.  காளியம்மன், மாரியம்மன் என்றும் இருக்கலாம். தினமும் நாள் தவறாமல் செல்ல வேண்டும். அதனால் தான் அருகில் இருக்கும் ஆலயம் என்று சொன்னேன். ஒரு நூறு வருடமாவது பழைய ஆலயமாக இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் ராகுகாலம் முடியும் கடைசி அரை மணி நேரத்தில் இருங்கள். 

மனதார வழிபடுங்கள்.

நீங்கள் அன்றாடம் வேலைக்கு போக வேண்டி இருந்தால், செல்ல முடியாதே.. என்ன செய்வது? 

திருமணம் ஆகி இருந்தால் உங்கள் மனைவியோ,  மணம் ஆகா விட்டால் உங்கள் சார்பாக உங்கள் தாயோ செல்லலாம். நீங்கள் வேலைக்கு செல்லாத நாட்களில் கண்டிப்பாக நீங்களே சென்று வர வேண்டும். ஞாயிற்று கிழமை சாயங்காலம் 4 .30 இலிருந்து 6 மணி வரை வரும். Miss பண்ணாதீங்க !!  


உங்களால் முடிந்த வரை அபிசேகத்திற்கோ, தினமும் தீபத்திற்கோ , மாலையோ,... இல்லை ...  ஒன்றும் முடியவில்லை என்றாலும் .. வெறுமனே சென்றாவது வாருங்கள்.. அம்மன் பார்வை உங்கள் மேல் தெளிவாகப் படும்படி அமருங்கள்..  அதன் பிறகு உங்களுக்கு அந்த அம்மனே எப்படி வழி காட்டுகிறாள்  என்று பாருங்கள்... சமயத்தில் ராகு தசை நடப்பவர்களிடம் அம்மன் பேசுவதைக் கூட அவர்களால் உணர முடியும்.. இது எப்பேர்ப்பட்ட  அனுபவம்!!.. உங்கள் அத்தனை கோரிக்கைகளும் அற்புதமாக ஈடேறும். 


இதெல்லாம் பண்ணினா என்ன ஆகும்?  இப்போ, நம்ம சத்யம் க்ரூப் சேர்மன் - ராமலிங்க ராஜு இருந்தாரே... அவர் இந்த fraud லெ மாட்டாமே இருந்தா எப்படி இருந்து இருப்பார்?  எத்தனையோ பேருக்கு வழிகாட்டி... ஆதர்ஷ நாயகன்... லட்சக் கணக்கான ஷேர் ஹோல்டர் க்கு கடவுள்.. இப்படி ஆகிடலாம்.. நீங்களும்.. ஆனா நல்லா விதமா... 
    
வித்தை தெரிஞ்சவருக்கு ராகு தசை ... சந்தனம் ... தெரியாதவங்களுக்கு  சாக்கடை தான். 

நன்றி :
Read more: http://www.livingextra.com/2011/02/blog-post.html#ixzz2fox9U1Ry

No comments:

Post a Comment