photo

photo
Venkatesh.A.S

Monday, 14 October 2013

Man of Self Esteem (வைராக்கிய மனிதர்கள்)



மனித வைராக்கியம் 

 வைராக்கியத்தில் இரண்டு வகை உண்டு, ஒன்று பிரசவ வைராக்கியம், இன்னொன்று மயான வைராக்கியம். இதில் பிரசவ வைராக்கியம் என்பது பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் இன்பம் கலந்த துன்பத்தால் இனி மேல் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சபதமேற்று, பின் அதை மறப்பது. மயான வைராக்கியம் என்பது ஏதாவது இறந்தவர் வீட்டுக்கு போனால் நாமும் சாகப்போகிறோம் என்ற எண்ணம் மேலிட்டு இனி மேல் நேர்மையாக நடக்கவேண்டும் என்று எண்ணி, சபதமேற்று – இரண்டு நாளில் மறந்து மாமூல் வாழ்க்கைக்கு வருகிறோமே அதுதான். இவை இரண்டுமே தோன்றி மறையும் மனித அவலங்கள்.





வைராக்கியம் என்பது கண்டிப்பாக மனிதர்களுக்கு இருக்க வேண்டிய  ஒன்று.  வைராக்கியம் என்பது சுய சிந்தனை எனலாம். இதில் போலியானதையே பிரசவ வைராக்கியம் , மயான வைராக்கியம் என்று சொல்கிறோம். நிகழ்காலத்தில் எல்லாவற்றிலும் போலிகள் ஊடுருவதால் இங்கேயும் வைராக்கியம்  என்பதை "உண்மையான வைராக்கியம்" என்று வாசிக்கவும். 

இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடு (Principle) இருக்கும்.  சில பேருடையது சரியாகவும் சில பேருடையது தவறாகவும் இருக்கலாம். ஆனால் கோட்பாடுகள் அடிப்படையில் நேர்மையாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு நடுத்தர வர்கத்து மனிதனுக்கு "நான் சுத்தமான நீரைத்தான் பருகுவேன் என்பது கோட்பாடானால், Mineral water தான் சாப்பிடுவேன் என்பது கூடுதல் விருப்பமாகும். அதில் எப்பொழுதும் Mineral Water தான் பருகுவேன் என்பது கூடுதல் பேராசை ஆகும்". இங்கே கோட்பாடுடன் சில "கூடுதல்கள்" சேரும் போது தான் பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கும்.  

சில பேர் இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருப்பார். சில பேர் எப்படியும் வாழலாம் என்றிருப்பார். எது எப்படியோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நியாயமான எண்ணமிருந்தால் வாழ்க்கை கடினமாகாது. 

கதையை படிக்க தொடரவும்....

*********************

கருங்கல் ஜல்லி கறுப்புத் தார் கலவையை, மிக நேர்த்தியாக ஆவி பறக்க... பறக்க... ராட்சஷ இயந்திரம் நிலத்தில் கொட்டிக் கொண்டே போக... ஏழுமலை தனது முரடான பூட்ஸ் காலாலும், ஆயுதத்தாலும் சமன்படுத்தி தொடர்ந்து கொண்டிருந்தான். "கட மடா" சத்தத்துடன் மற்றொரு ராட்சஷ ரோடு ரோலர் அவன் பின்னால் உருண்டோடி வந்து கொண்டிருந்தது.
ஏழுமலை மனைவி மீனாட்சி, பூக்களுக்கு நீர் தெளிப்பதுபோல, தார் திவாலையை கற்கள் மேல் தெளித்து முன்னே போய்க் கொண்டிருந்தாள். கற்களும் பூக்கள் போன்று அந்த நடுநிசி நிலவு வெளிச்சத்தில் ஜொலி ஜொலித்தன.
"யப்பா குமாரு, கலவ சரியில்ல ஒழுங்கு மரியாதையா ஜோலிய பாரு.. இல்ல கொமட்ல குத்துவேன்... ராஜுக்கா ஆகட்டும், வீட்ல புருஷனுக்கு ஒண்ணும் ஆயிடாது. குல தெய்வம் பாத்துக்கும்.."
கான்ட்ராக்டர் யதுகுலராவ் விடிவதற்குள் திட்டமிட்டபடி வேலையை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில்... இயந்திரங்களின் சப்தத்தையும் மீறி காட்டுத்தனமாகக் கத்திக் கொண்டிருந்தார். அழுக்குச் சட்டை போட்டிருந்த அவரும் ஒரு தொழிலாளி போன்று காணப்பட்டார்.
ஏழுமலைக்கும் அவன் மனைவிக்கும் யதுகுலராவ் தெய்வம் போன்றவர்.
"சாமி, நீங்க இல்லேன்னா.. நாங்க இல்ல. உங்க கருணையாலதான் எங்க குடும்பம் பசி இல்லாம இருக்கு" என கையெடுத்துக் கும்பிட்டு நன்றி விசுவாசத்தை ஒவ்வொரு முறையும் காட்டும்போதும் ஏழுமலை கண்களில் கண்ணீர் திரளும்.
விவசாயத்துக்காக காத்திருந்து.. காத்திருந்து வயிற்றில் வரி விழுந்ததுதான் மிச்சம். பல வருடங்களாக மழை வேறு மாயாஜாலம் காட்டுகிறது. அண்டை மாநிலங்களும் தண்ணீர் காட்டுகிறது.
எலிக்கறி அவலத்தில் இருந்தும், தற்கொலையில் இருந்தும்.. தப்பித்துக்கொள்ள குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வேலை தேடி நாலாபுறமும் புறப்பட்டபோது, ஏழுமலை தெரிந்தவரின் சிபாரிசு மூலமாக ரோடு கான்ட்ராக்டர் யதுகுலராவிடம் வந்து சேர்ந்தான்.
"ஏழுமலை, நான் ரோடு கான்ட்ராக்டர். வேலை கொஞ்சம் கரடுமுரடானதாக இருக்கும், ராத்திரி பகல் மாறி மாறி வேலை பாக்க வேண்டியிருக்கும். உனக்கும் உன் சம்சாரத்துக்கும் சரிப்பட்டு வரும்னா, தாராளமா வேலையப் பார்க்கலாம்."
வேலை கிடைத்துவிட்டதை, ஏழுமலையால் நம்ப முடியவில்லை.
"என்னப்பா... அப்படியே நின்னுட்டே"
"பட்டணத்துல கூட நல்லவங்க இருக்காங்க. நீங்க தெய்வங்க.."
"எல்லோரும் நல்லவங்கதான்... ஏழுமலை"
பழக்கமில்லாத தொழில் என்றாலும், பழகிக்கொள்வதில் ஏழுமலைக்கும் மீனாட்சிக்கும் எந்த சிரமமும் இல்லை. பூட்ஸ் போட்டு கற்கள் மீது நடக்கும்போது ஏழுமலை தட்டுத்தடுமாறி விழுந்து... மீனாட்சியை விலா நோக சிரிக்க வைத்தான்.
"பொறந்த புள்ள கணக்கா... என்னய்யா கேலிக் கூத்து" என்றாள். போனில் இந்தச் சமாச்சாரத்தை கிராமத்தில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் மகனிடம் சொல்லி, அவனையும் சிரிக்க வைத்தாள்.
"கண்ணா நல்லா இருக்கியா... வேளைக்குச் சாப்பிடுறியா"
"ஆமாம்மா... ஸ்கூல்ல முட்டை எல்லாம் போடுறாங்க"
கான்ட்ராக்டர் செல்போனுக்குப் பாட்டியுடன் சேர்ந்து மகன் கண்ணன் போன் பண்ணுவதை இரண்டு நாளுக்கு ஒருமுறை மீனாட்சி எதிர்பார்ப்பாள். இவளும் வீட்டின் எதிரே இருக்கும் மளிகைக் கடைக்குப் போன் போட்டு வரச் சொல்லிப் பேசுவாள். அப்படியே கடனாக மளிகைச் சாமான்கள் கொடுக்கச் சொல்லி வேண்டுவாள். அவர்கள் சென்னைக்கு வந்து ஐந்தாறு மாதம் ஆகிறது. மாதம் தவறாமல் ஊருக்குப் போவார்கள். வேலை அதிகமாக இருக்கும் சமயத்தில் மீனாட்சி மட்டுமாவது போய் வருவாள்.
ஏழுமலை இந்த ரோடு போடும் வேலையை போகப் போக நேசிக்கவே ஆரம்பித்தான். திடீரென டாங்கிகளுடன் போருக்குப் புறப்பட்டுப் போவது போல மெஷின்களோடு சென்று, ரோடு போட்டு வந்த அழகை... பகலில் ஏழுமலை போய் பார்ப்பான்.
சலவை செய்த நீண்ட கறுப்புப் புடவை தரையில் காய வைத்தது போல என்ன அழகான காட்சி. நேற்று இல்லாத மாற்றத்தைப் பார்க்கும் பொதுமக்களின் முகம் மலர்வதையும், ஒரு கணம் ரசிப்பதையும் நெடுநேரம் ஓர் ஓரமாக நின்று ஏழுமலை ரசிப்பான். பாதசாரிகள் கொஞ்சம் மெல்ல நடந்து பூவின் மென்மையை உணர்வார்கள்.
ஏழுமலை போன்ற வெளியூர்க்காரர்களுக்கு வேலை கொடுத்தது போல தங்குவதற்கும் இடம் கொடுத்து இருந்தார் கான்ட்ராக்டர் யதுகுலராவ். வேன் வைத்து அழைத்துப் போவார்கள். வந்து விடுவார்கள். கடந்த இரண்டு நாட்களாக வேன் வரவில்லை. வேலையும் இல்லை.
"என்னங்க... ஏதேதோ பேசிக்கிறாங்க. ராஜுக்கா கூட இனிமே வேலை இருக்காதுன்னு நேத்து சொல்லிட்டுப் போச்சு. நாம என்ன பண்ணப் போறோம்?"
மீனாட்சி ஒருவித மிரட்சியுடன் கேட்டாள். வேலை இல்லாத பழைய நிலையை நினைத்துப் பார்க்கும் ஏழுமலை மனதுக்குள் பயம் தடம் பதித்தது. என்ன பதில் சொல்வது என ஏழுமலை தவித்துக் கொண்டிருந்தபோது, புழுதி பறக்கவிட்டு ஒருவித அவசரமாய் முதலாளி கார் வந்தது.
கதவைத் திறந்து அமைதியாக இறங்கிய யதுகுலராவ் வேட்டி சட்டையில் இருந்தார். இன்றும் வேலை இல்லையா?
"என்ன ஏழுமலை... எங்க உன் சம்சாரம்? பாவம்..! ஓய்வில்லாம வேலை பார்த்து ரொம்பக் களைச்சுப் போயிட்ட. உங்களுக்கு நல்ல சேதி. நம்ம டெண்டர் முடிஞ்சு போச்சு. புது டெண்டர் கிடைக்க கொஞ்ச நாளாகும். அதுவரைக்கும் ஊருக்குப் போய் சாதி சனத்தோட சந்தோஷமா இருங்க. வேலை அமைஞ்சதும் தகவல் தெரிவிக்கிறேன்."
தொழிலாளர்கள் துவண்டுவிடக் கூடாது என முதலாளி சாதுரியமாகப் பேசியது கிராமத்துக்காரனான ஏழுமலைக்குப் புரியாமல் இல்லை. தரவேண்டிய ஊதியத்துடன், பயணத் தொகையும் கொடுத்து வேட்டி சேலையும் கொடுத்தார்.
மகனுக்குப் பிடித்த விளையாட்டுப் பொம்மை இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்டு அன்றே ஊர் திரும்பினார்கள்.
அம்மா, அப்பாவை ஒன்றாகப் பார்த்த ஏழுவயது மகனுக்குத் தீபாவளி கொண்டாட்டம்.
"ஐ.. ஜாலி... எங்க ஸ்கூல்ல அடுத்த வாரம் ஆண்டு விழா. நீங்களும் வரணும் என்ன?" என்றான்.
மகனைப் பார்த்ததும், தங்களுடைய சோகம் மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். மீனாட்சியிடம் அவளது தாய் ரகசியமாக கேட்டாள். பெட்டி படுக்கையுடன் திரும்பியது அவளையும் கலவரப்படுத்தி இருக்க வேண்டும்.
"என்னம்மா மீனாட்சி... போன எடத்துலேயும் வேலை இல்லேனுட்டாங்களா?"
"அதெல்லாம் இல்லம்மா... நீ வேணா பாரேன்... கொஞ்ச நாள்ல கூப்பிடுவாங்க. நாங்க நல்ல பேரு எடுக்கிற மாதிரி உழைச்சிருக்கோம். முதலாளி பெரிய சிபாரிசு, செல்வாக்கு உள்ள மனிதர். டெண்டர் கிடைச்சதும் கூப்பிடுவார்" என்ற மீனாட்சியின் பேச்சில் பலமான நம்பிக்கை.
அப்பாவிடம், "நீங்க போடுற ரோடு எப்படிப்பா இருக்கும்" என்றான் கண்ணன்.
"ம்... உனக்கு நேத்து புது சிலேட்டு வாங்கிக் கொடுத்தேன் இல்ல. அது போல புத்தம் புதுசா கருப்பா இருக்கும்"
"அப்பா சென்னையில் கரண்டு கட் ஆகாதா... ஐஸ் வண்டிக்காரர் சொன்னாருப்பா"
"இங்கதான் கண்ணு. ஆறுமணி நேரம்னு சொல்லி வச்சு கட் பண்றாங்க. அங்க கட் பண்ண மாட்டாங்க"
பையன் பிரமிப்பாய்... கேள்வியும் பதிலுமாக அடுக்கிக் கொண்டே போக...
மளிகைக் கடை வேலை ஆள் தலை தெறிக்க ஓடி வந்து மூச்சு வாங்கினான். ஏழுமலை அவன் வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்தே விட்டான்.
இந்த இரண்டு மாதமாக மளிகைக்கு கடை பாக்கி ரூபாய் ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. அதைக் கேட்கத்தான் கூப்பிடுகிறாரோ?
"என்னங்க யோசனை... உங்களுக்குப் போன்"
ஏழுமலை, அந்தக் கடை ஆளைப் போல தலைதெறிக்க ஓடிப் போனவன், அடுத்த சில நிமிடங்களில் மூச்சு வாங்க திரும்ப வந்து மீனாட்சி முன் நின்றான். முகத்தில் மகிழ்ச்சி. வார்த்தையில் சந்தோஷம்.
"மீனாட்சி நம்ம கான்ட்ராக்டர்தான். வேலை ரெடி ஆயிடுச்சாம். நம்பளை உடனே நாளைக்கே புறப்பட்டு வரச் சொல்லிட்டார்."
"நம்ம ஊரு பால விநாயகன் கருணையில்தான் இதெல்லாம் நடக்குது. காசு வந்ததும் தேங்காய் உடைக்கணும்"
பாட்டி பேச்சைக் கேட்டு ஒழுங்கா நடந்துக்கணும் என மகனுக்கும், மகனைக் கவனமாகப் பார்த்துக்கணும் எனத் தாயிடமும் மீனாட்சி அறிவுறுத்தினாள். பிரியும் நேரம் நெருங்க நெருங்க பாசம் கூடித்தான் போகிறது. செல்ல மகனுக்கு முத்தம் கொடுத்தாள். பெற்றுக் கொண்டாள்.
தம்பதி சகிதமாக மூட்டை முடிச்சுக்களோடு இரவு கடைசி பஸ் பிடித்து, காலையில் முதலாளி முன் நின்றார்கள்.
ரோடு போட இயந்திரங்கள். உபகரணங்களுக்குப் பதிலாக பெரிய பெரிய சக்கரங்களில் மின்சார கேபிள்களும், மண் வெட்டி கடப்பாரையுமாக அந்த இடம் வேறு வேலைக்கான ஆயத்தத்தில் இயங்கிக் கொண்டிருந்ததை ஏழுமலை உணர்ந்தான். அவனுக்குப் பிடித்துப் போன தார் வாசனை எங்கே? பழைய ஆட்களை விட புதிய ஆட்களும் நிறையப் பேர் இருந்தார்கள்.
"என்ன ஏழுமலை அப்படி பாக்கறே... இந்த முறை ரோடுபோடுற டெண்டர் கிடைக்கல. விடுவேனா? ரோட்டுல கேபிள் பதிக்கிற டெண்டர் வாங்கிட்டேன். சந்தோஷமா, நாம ரோடு போட்டோம் இல்ல. அதே ரோட்டுல ஆங்காங்கே வெட்டி கேபிள் பதிக்கணும்" என கான்ட்ராக்டர் யதுகுலராவ் சிரித்தார்.
ஏழுமலை அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான். "என்னங்கய்யா சொல்றீங்க?"
"ஆமாம் ஏழுமலை. அதுவும் ஒரு வேலைதானே... சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு. பூஜை போட்டு ஆரம்பிச்சிடுவோம்"
"நாம அழகழகா போட்ட ரோட்டை நாமளே வெட்டி கேபிள் பதிக்கணுமா.. ஐயோ... என்னால முடியாதுங்க... முடியாது" பதறிப் போய் துவண்டவனாய் அதே இடத்தில் உட்கார்ந்த ஏழுமலை சிறுபிள்ளை மாதிரி, கேவி கேவி அழவும் ஆரம்பித்துவிட்டது யதுகுலராவை திகைக்க வைத்தது.
"முதலாளி... பச்சப்புள்ள முகம் மாதிரி அந்த ரோடுதாங்க என் மனசுல பதிஞ்சிருக்கு. அதைப் பாலம் பாலமா வெட்ட என்னால முடியாதுங்க. பலநாள் கண்முழிச்சு வியர்வை சிந்த நாம் வேலை பார்த்தோம். அந்த உழைப்பை நாமளே மதிக்கலைன்னா வேறு யார் மதிப்பாங்க?"
ஏழுமலை அழ மறந்து அவனையறியாமல் புலம்பவும் செய்தான்.
"மெத்த படிச்சவங்களும், மெத்தனமா நடந்துக்கறாங்க. நடவு நட்டதுக்கு அப்புறம் யாராவது உழுவாங்களா.. மொதல்ல கேபிள் பதிச்சிக்கிட்டு... பிறகு இல்ல ரோடு டெண்டர் அறிவிக்கணும்? குரங்கு கையில கிடைச்ச பூமாலை மாதிரி குதறிப் போடுற வேலை பாக்குறதுக்குப் பதில் பட்டினி கெடந்து சாகலாம். எனக்கு உங்க வேலையும் வேணாம். பொல்லாத கூலியும் வேணாம். எங்களை விட்டுருங்க. ஊருக்குப் போயிடறோம்."
மூட்டை முடிச்சுகளுடன் தெருவில் இறங்கி நடக்கும் ஏழுமலையும் அவன் மனைவியையும் மேலும் திகைத்துப் போய் பார்த்து நின்றார், கான்ட்ராக்டர் யதுகுலராவ்.
மேலிட சிபாரிசு பிடித்து, இந்தக் கேபிள் பதிக்கிற வேலையை வாங்கியிருந்தார். பணம் கிடைக்கிறது என்பதற்காக எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாமா? ஏழுமலை கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட் யதுகுலராவைப் பலமாக யோசிக்க வைத்தது.
ரோடு போடுவது என்பது ஆக்கல். போட்ட ரோட்டில் பள்ளம் தோண்டுவது என்பது அழித்தல். ரோட்டை உருவாக்கியவனே அதை அழிக்கலாமா?
ஒரு கூலிக்காரனிடம் இருக்கும் நியாய உணர்வு தனக்கில்லாமல் போச்சே.. யதுகுலராவ் தூரத்தில் போய்க் கொண்டிருந்த ஏழுமலையையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
******************
கதைபகுதி :
நன்றி : http://www.koodal.com/tamil/stories/short-stories.asp?id=642&content=tamil&name=road-workers

Sunday, 13 October 2013

Psycho Gang (மூடர் கூட்டம்)


வொய்  திஸ் கொலைவெறி ?

ஒரு பெண் தன் தாயினுடைய இறுதிச்சடங்கின் போது 
ஒரு இளைஞனை கண்டாள். 
அவனது உருவம் அவளை வசீகரிக்கவே அவனை விரும்பினாள். 
துரதிர்ஷ்டவசமாக அன்று அவனுடைய கைபேசி எண்ணை அவள் பெற 
இயலவில்லை. 
சில நாள் கழித்து அவள் தன் சகோதரியை கொலை செய்தாள்.
காரணம் ..............


தன் சகோதரியின் இறுதிசடங்கில் அந்த இளைஞனை மீண்டும் 
பார்க்க முடியும் என்று நம்பினாள். 
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது)

2020 ஆம் ஆண்டில் உலகில் மனிதர்களின் இறப்பிற்கு பெரும்பாலான காரணம் மன அழுத்தமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதற்க்கு முக்கிய காரணம் மனிதர்களின் மிக வேகமான வாழ்க்கை முறை தான். மிக வேகம் பின்னர் மிகவும் சோகம். மிக வேகமான மன நிலையில் யாருக்கும் சரியான முடிவு எடுக்க வராது. எடுக்க கூடாது. 


மோகம் அது வேகமானால் பின்னர் கோபம் அதி வேகமாகும். ஆசை அதி வேகமானால் பின்னர் சலிப்பு படு வேகமாகும். காமம் படு வேகமானால் பின்னர் ரோகம் படுக்க வைக்கும் வேகமாகும். 

மன நோய் எல்லா நோய்களுக்கும் வாசலாகும். ஆகவே எல்லோருக்கும் சுய பரிசோதனை அவசியமாகும் இவ்வுலகினில் தற்பொழுது. 

சந்திரனும், புதனும் ஒருவருடைய ஜாதகத்தில் பலம் இழந்தால் அவர்   மன நோயாளியாக மாற வாய்ப்பிருக்கும். இன்னும் ஒரு சில அமைப்புகளை பொறுத்து அதன் தீவிரம் தெரியும். 

*******************

மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அதுபோலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந்திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோயின் பரிமாணத்தை மாற்றி விடுகின்றன.
ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மனநோய் பாதித்திருந்தாலும் அவர்களை மக்கள் ஒதுக்கி விடவில்லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மனவாகு, உடல் அமைப்பு என்கிற பல்வேறு கூறுகள் மனநோயின் வித்துகளாக உள்ளன. அன்பு மனைவியை பறிகொடுத்த ஒருவன் பித்தனாகி விடுகிறான். ஆனால் மற்றொருவன், மனைவி இறந்தால்தான் புது மாப்பிள்ளை என்றாகி விடுகிறான்.
நெருக்கடியான காலங்கள் ஒருவரை மனநோயாளியாக மாற்றி விடுகிறது. தவறான போதனைகள், போலியான முன் மாதிரிகள் இன்றைய இளைஞர்களைத் தடுமாறச் செய்கின்றன. நல்லதையும், கெட்டதையும் பாகுபடுத்த தெரியாதபடி அறியாமை தடுத்து விடுகிறது. 
மன இறுக்கங்களும், இன்னல்களும் மனிதனைத் தனித்துவிட்டு தற்காப்பு மாயைக்குள் தள்ளிவிட்டு விடுகிறது. மனக் கவசங்களை அணிந்துகொண்டு தற்காலிகமாக நிம்மதிகளை தேடிக்கொள்ள வகை செய்து விடுகிறது. எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தன் முன்னேற்றத்திற்கு தானே தடைகளை ஏற்படுத்திக் கொள்கிறான். தன்னம்பிக்கை, முயற்சி ஆகியவற்றை அடகு வைத்துவிட்டு பிறரை சார்ந்திருக்கும் கையாலாகாத்தனத்திற்கு தன்னை தாழ்த்திக் கொள்கிறான்.
மது அடிமைக்கு தன்னை உள்ளாக்கி கொள்ளாமல் இருந்திருந்தால் எனது நண்பர் ஒருவர் தற்சமயம் ஸ்டேட் வங்கியில் தலைமைப் பொது மேலாளராக வீற்றிருந்திருப்பார். குடிப்பழக்கம் எனும் நோய் பீடித்தமைக்கு அவர் கூறும் காரணம் தன் மனைவியின் நடத்தை சரியில்லை என்பதுதான். அவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் நியூயார்க்கில் மற்றொருவர் கனடாவில் இருக்கின்றனர். அவர், "நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். என் வேலைக்காரர்கள் கூட என்னை மதிக்கவில்லை" என்று கூறி கதறி அழுகிறார். இவரும் மனதில் தற்காப்பு உத்தியில் தன்னை சிக்க வைத்துக்கொண்டு தன் இயலாமைக்கு ஒரு காரணத்தை கூறிக் கொண்டு சுகம் காண்கிறார். இவருக்கு மனப் போராட்டங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லை. இத்தகைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள பயிற்சியை தருவதன் மூலம் மனநோயை விரட்டலாம். மனதின் தற்காப்பு இயக்கம் அல்லது சக்தி இங்கு தேவைப்படுகிறது. காரணங்களைச் சொல்லிக் கொண்டு காரியங்களை விட்டு விடுகிறோம்.
ஒருவன் தன்னை பற்றிய கருதுகோளை, நல்ல அபிப்ராயத்தை பெற்றிருக்க வேண்டும். இதனைப் பெற்றோர்களும், மற்ற சமூக அங்கத்தினரும் உருவாக்கவேண்டும். மனவெழுச்சிகளான சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம், ஆவேசம், பயம், இரக்கம், அழுகை போன்றவற்றை எப்படி எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்கிற சூட்சுமங்களை சொல்லித்தர வேண்டும். இது நல்ல கட்டுக்கோப்பான ஆளுமையை வளர்த்துக்கொள்ள உதவும். மனவெழுச்சிக் கட்டுப்பாடுகள் இல்லாமை மனநோய்க்கு வித்தாக அமைந்துவிடும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். அதுபோலவே நல்ல உடற்கட்டு, ஆரோக்கியம் இருக்க வேண்டும். வலிமையான உடல் தெளிவான சிந்தனைக்கு ஆதாரமாக அமையும். பிறரோடு இணக்கமாக செயலாற்ற வேண்டிய சமூகத் திறமைகளை சொல்லித்தர வேண்டும்.
பேச்சாற்றல், எழுத்தாற்றல், உரையாடல், நட்பு பாராட்டல், குழுவோடு இணங்கி செயல்படல் போன்ற ஆற்றல்களை பெருக்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய ஆற்றல்களில் உள்ள குறைபாடுகள் மனநோயை தோற்றுவிக்கின்றன. உயிரியல் ரீதியான பல காரணங்கள் மனநோய்களின் வேர்களாக உள்ளன. பாரம்பரிய மரபு அணுக்களில் உள்ள குறைபாடுகள், தைராய்டு, பாரா தைராய்டு, தைமஸ், பியூட்டரி, அட்ரினல், பாலினச் சுரப்பிகள், பான்கிரியாஸ் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்க நீர்களின் மாற்றங்கள் மனநோய் தோற்றத்தில் பங்கு கொள்கின்றன. இதைப் போலவே ஊனங்களும் வித்துகளாக உள்ளன. பிறவி ஊனம், வியாதிகளினாலும், விபத்துகளினாலும் உண்டாகும் ஊனங்கள் மனக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. உடல்வாகுகளும், அமைப்புகளும் ஒருவரின் ஆளுமைப் பண்புகளை நிர்ணயம் செய்கின்றன. அதிகமான செல்லம், கண்டிப்பின்மை, புறக்கணிப்பு, அதிகமான கண்டிப்பு, அளவுக்கதிகமான பாதுகாப்பு, தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பு, குடும்ப சச்சரவுகள், குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கின்றன. இவை நாளடைவில் மனநோய்க்கான வாயிலை திறந்து விடுகின்றன. ஏழ்மை, வறுமை, இல்லாமை போன்ற கொடுமைகளும், பிறழ்வான மனநிலைகளை உருவாக்குகின்றன. சமூக தொழில்நுட்ப வளர்ச்சிகளும், மாற்றங்களும், நிதி நெருக்கடிகளும், தொழில் சார்ந்த பிரச்சினைகளும் மனநோய்களைத் துரிதப்படுத்தும் கருவிகளாகும். எனவே மனநோயின் ஆணிவேரைக் கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால் ஆல் போல் வளர்ந்துவிட்ட பிறகு அதனை சாய்ப்பது சிரமமான செயலாகி விடும். நடைபிணமாக்கி உற்றாருக்கும், பெற்றோருக்கும் சுமையாகி விடும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த எய்ட்ஸை விட முன்னுரிமை பெற வேண்டியது மனநோய் என்பதை அனைவரும் உணர வேண்டும். இதிலிருந்தே மனநோயின் தீவிரம் எவ்வளவு என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி மருத்துவத்தில் மனநோய்களை மாற்றக் கூடிய மருந்துகள் உள்ளனவா? என்று கேட்டால் நிறைய உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆங்கில மருந்துகள்:
மனநோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளைக் கொடுப்பார்கள். கடுமையான மன இறுக்கம், மன உளைச்சல், மனச்சோர்வு, பிறழ்வு போன்ற நோய்களுக்கேற்ப மருந்துகளை முடிவு செய்வார்கள். நோய் மிதமானது, கடுமையானது, மிகக் கடுமையானது, கொடுமையானது என்று வகைப்படுத்தி மருந்துகளை முடிவு செய்வார்கள்.
மனச் சோர்வை அகற்றும் மருந்து, பதட்ட நீக்கிகள், மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும் மருந்துகள், தூக்க மாத்திரைகள் போன்றவற்றை கொடுப்பார்கள. சிலருக்கு ஷாக் டிரீட்மென்ட் கூட கொடுப்பதுண்டு.
ஹோமியோபதி மருந்துகள்:
ஹோமியோபதி எப்போதுமே மனிதனை முழுப் பொருளாக பார்க்கிறது. மனிதனிலிருந்து அவன் உறுப்புக்கு வைத்தியமே தவிர, உறுப்பிலிருந்து அவனுக்கு வைத்தியமில்லை. மூன்று கோணமான முக்கோணத்தில் மன, உடல், சமூக நலனில் ஹோமியோபதி மருந்துகள் அக்கறை செலுத்தும். இதனால் தனி மனிதனின் தனிப்பட்ட சிக்கல்கள் மருந்துகளால் சிதறுண்டு போகும். மேற்சொன்ன எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், மனநல பாதிப்பாக வெளிப்பட்டாலும் ஹோமியோபதியில் Antianxiey, Anxiolytic, Antidepressant போன்ற தொந்தரவுகளுக்கு அகோனைட், இக்னீஷியா, பல்சட்டிலா, பிளம்பம் போன்ற மருந்துகள் உள்ளன. இவை நோயை முழுமையாக குணப்படுத்தி மனதை மகிழ செய்யும்.
********************
****பகுதி****
நன்றி : http://www.koodal.com/health/interview_guide.asp?id=616&title=psychological-treatment-for-stress

Friday, 11 October 2013

Value of Loyalty (விசுவாசத்தின் மதிப்பு)


எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு 

"வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் ! 

வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன் ! 

கண்ணில் நீரை காணாமல், கவலை ஏதும் கூறாமல்,

என்னை எண்ணி வாழாமல் 

உனக்கென நான் வாழ்வேன் !" 

- இது "நெஞ்சிருக்கும் வரை" திரைப்படத்திற்காக மேல் கண்ட தலைப்பில் ஆரம்பிக்கும் பி. சுசீலாவின் இனிய குரலில் அமைந்த (கவியரசர் எழுதிய?) மிக அருமையான பாடல். 

இந்த படத்தில் என்ன விசேஷம் தெரியுமா? 

இதில் வரும் எல்லா கதா பாத்திரங்களும் "make up" இல்லாமல்  நடித்துள்ளார்கள். அதாவது உருவம் உள்ளது உள்ளபடி ! 

இந்த பாடலின் வரிகள் ஒரு மனைவி தன் அன்பு கணவனின் மேல் கொண்டுள்ள விசுவாசத்தை பிரதிபலிக்கிறது. தற்போதைய உலகில் நன்றி, விசுவாசம் இவைகள் சொற்கள் வரையில் வெறும் ஏடுகளில் மட்டுமே காணப்படும் அவலமாகி விட்டது. ஏனெனில் சுயநலம் மேலோங்க ஆரம்பித்து விட்டால்  அது மற்ற எல்லாவற்றையும் (விசுவாசம் உட்பட) குழி தோண்டி புதைத்து விடும். அதுபோலவே இந்த திரைப்படத்திலும் அன்பு மனைவியாக வரும் கே. ஆர் . விஜயா வின் கதா பாத்திரமும், சந்தேகமே உருவான கொடூர குணம் கொண்ட கணவனாக வரும் முத்துராமனின் கதா பாத்திரமும் எவ்வளவு வித்தியாசம் ! துரதிர்ஷ்டவசமாக உண்மையான விசுவாசம் அந்த விசுவாசத்துக்கு உரியவரின் கண்ணுக்கு தெரியாமல் போவது அவரவர் தலைவிதி. இறைவனின் பாகுபாடு- ஈடு இணையற்ற, மிக நேர்த்தியான கட்டைளைகளை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.    

உண்மையான விசுவாசம் உண்மையையே  பார்க்கும். உள்ளதை உள்ளபடியே நோக்கும். இங்கே "உண்மையான விசுவாசம்" என குறிப்பிடுவது ஏனெனில் இப்பொழுது எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. குடிக்கும் குடிநீர், பால்  உட்பட. அதனால் தான் சில தயாரிப்புகளில் "Original" என்று அச்சிட பட்டிருக்கும். போலியாக மாறிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் போலிகளே மிகவும் கவர்ச்சியாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் முடிவில் வேறு மாதிரி இருக்கும். ஆனால் உண்மையான விசுவாசம் என்றென்றும் ஒரேமாதிரி இருக்கும்.

இந்த விசுவாசம் எல்லா இடத்திலும் இருக்கும். அதாவது கணவன் - மனைவி , முதலாளி - தொழிலாளி , ஆசிரியர் - மாணவன் , தலைவன் - தொண்டன் , நண்பன் - நண்பன் இப்படி. இவர்களுக்கு இடையே உள்ள விசுவாசம் உண்மையானதா, போலியானதா என்பது அவரவர் நேரம், காலம், கர்மா இவற்றை பொறுத்தது.  

விசுவாசம் பெரிதாக எதையும் எதிர் பார்க்காது, உண்மையான அன்பை தவிர. 
இந்த விசுவாசத்திற்கு என்ன விலை ? இதற்க்கு விலை மதிப்பில்லை . 
சில இடங்களில் விசுவாசம் மிக்கோருக்கு இறைவன் வெகுமதி அளிக்கிறான். ஒரு உண்மையான விசுவாசமான வேலைக்கரருக்கு இறைவன் தந்த வரத்தை  பாருங்கள். 

மேற்கொண்டு கதையை படியுங்கள்....


*********************
ஒரு பணக்கார தகப்பனும் மகனும் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வியட்நாம் போர் நடைபெறவே, மகன் அந்த போருக்கு போக வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் போரில் மிகவும் நன்றாக போரிட்டு, மற்றும் அநேக போர் வீரர்களை காப்பாற்றினான். அப்படி ஒரு வீரனை காப்பாற்றும்போது, அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. தகப்பனுக்கு அந்த செய்தி போய் தனது ஒரே மகன் இறந்த துக்கத்திலே இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டு கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது ஒரு வாலிபன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் சொன்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய போர் வீரரில் நானும் ஒருவன். உங்கள் மகன் உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவான். நீங்கள் ஓவியங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று. நான் ஒரு பெரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகனை நான் வரைந்துள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டிக் கொணடான். தகப்பன் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘இல்லை இல்லை உங்கள் மகனால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறி படத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் அந்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து, வருகிற ஒவ்வொருவருக்கும் காட்டினார்.
.
சில மாதங்கள் கழித்து அவரும் மரித்தார். அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு வந்தன. புகழ்பெற்ற ஓவியங்களாக இருந்தபடியால் அவற்றை வாங்க அநேகர் வந்திருந்தனர். ஏலத்தை நடத்துபவர், முதலாவது அவருடைய மகனின் அந்தப் படத்தைக் காட்டி ‘யார் இதை வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்தை ஆரம்பித்தார். அங்கு அமைதி நிலவியது. திரும்பவும் அவர் 'யார் வாங்குகிறீர்கள்? 200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?' என்று கேட்டார். பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருடைய மகனின் படத்தை வாங்க வரவில்லை. மற்ற ஓவியங்களை ஏலமிட ஆரம்பியுங்கள் என்று கேட்டது. ஏலமிடுபவரோ, ‘அவருடைய மகன்; அவருடைய மகன் ஓவியத்தை  யார் வாங்க முன்வருகிறீர்கள் ’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்த வீட்டில் பரம்பரை வேலைக்காரறாய் இருந்தவர் , 10 டாலர் எனக் குரல் கொடுத்தார். உடனே ஏலமிடுபவர் யாராவது 10 டாலருக்கு  மேலே தர தயாராக உள்ளீர்களா என்றுக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. பின்னர் 10 டாலர் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்தை அந்தத் தோட்டக்காரனுக்குக் கொடுத்தார். மற்றவர்கள் பொறுமையை இழந்து, ‘மற்ற ஓவியங்களை ஆரம்பியுங்கள்’ என்றுக் கத்தினார்கள். அப்பொழுது  ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம் முடிந்தது’ என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு ‘எனக்கு முன்னமே இரகசிய உயிலைப் பற்றி சொல்லப்பட்டது. அதாவது யார் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு அவருடைய  எல்லா சொத்துக்களும் ஓவியங்களும் சொந்தம் என்று அவர் உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆகையால் விசுவாச மிகுதியால் அவருடைய  மகனுடைய ஓவியத்தை வாங்கிய  அந்த வீட்டு வேலைக்காரருக்கே  எல்லாம் சொந்தம் என்று கூறி ஏலத்தை முடித்தார். இதைக்கேட்ட மற்றவர்கள் வாயடைத்து போயினர். 

ஏலத்திற்கு வந்த அத்தனை பேர் எண்ணங்களிலும் அந்தந்த ஓவியங்கள் மற்றும் அதனை வரைந்த புகழ் பெற்றவர்கள் மீதே ஒரு விசுவாசம் (தேவையில்லாத) இருந்தது. இதுவும் ஒரு விதமான போலி விசுவாசமே. நன்றாக கவனித்தால் இதிலும் சுயநலம், வறட்டு கௌரவம் இருக்கும். ஆனால் அந்த வேலைக்காரர் தன் எஜமானனின் மகனுடைய ஓவியத்தை வாங்கி (தன் சக்திக்கேற்ற விலையில்) தனது உண்மையான விசுவாசத்தை வெளிப்படுத்த எண்ணினார். இது தேவையான விசுவாசமே. அதற்க்கு தான் இறைவன் இவ்வளவு பெரிய பேரினை அந்த வேலைக்காரருக்கு தந்தார்.  
*************************
***பகுதி ***
நன்றி : anudhinamanna.net

Thursday, 10 October 2013

Hero's of the Shadows ( நிழல் நாயகர்கள் )


நீதியின் நிழல் 



நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் ! 

உன் நிழலையோ பூஜிக்கிறேன் !

அதனால் தான் 

உன் நிழல் விழுந்த இந்த நிலத்தின்  மண்ணைக்கூட 

என் நெற்றியில் நீறு போல் 

திருநீறு போல் 

இட்டுக்கொள்கிறேன் ! 

- இந்த வரிகளை சத்தியமாக நான் எழுதவில்லை. "அக்னி சாட்சி " எனும் அருமையான திரைப்படத்தில்  SPB யின் இனிய குரலில் வரும் "கனா காணும் கண்கள் மெல்ல" என்னும் பாடலில் வரும் அழகிய வரிகள். 

உலகில் இந்த நிழல் எப்படி முக்கியம் வாய்ந்ததாகிறது என்பதை இந்த வரிகள் எப்படி அழுத்தமாக உணர்த்துகின்றன !

மேலும் "நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்றும் நிழலை பற்றி உயர்வாக சொல்வார்கள். இப்படி நிழலுக்கே இவ்வளவு பெருமை உண்டென்றால், இந்த உலகினை, உலக மக்களை நிழலாக இருந்து கொண்டு பல விதங்களில் சோதனைக்கு / வேதனைக்கு ஆளாக்குபவர்கள் - இரண்டு நாயகர்கள் - ராகுவாகவும் கேதுவாகவும் இருந்து மனிதர்களை அவர்கள் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஆட வைப்பவர்கள் / ஆட்டுவிப்பவர்கள். 

இவர்கள்  / இவர்கள் சாரம் பெற்ற கிரகங்களின்  தசா புக்திகளில் பல மனிதர்கள் படும் பாடு அவர்களுக்கே தான் தெரியும். இவர்கள் பிடிகளில் அனுதினமும் சில நேரங்கள் வருவதுண்டு. ராகு காலமாகவும் , யம கண்டமாகவும் இருந்து எப்படி மனித குலத்தை நடத்தி செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். 

மற்ற படி இருவருமே நிழல் கிரகமாக இருந்தாலும், ராகுவுக்கும் கேதுவுக்கும் வித்தியாசங்கள் உண்டு. ராகு M N Nambiyaar போல கொடூரமாக நடந்து ஒருவருக்கு இறுதியில் ஞானத்தை கொடுப்பவர். கேது M R Radha போல தத்துவம் பேசி நடந்து ஒருவருக்கு இறுதியில் மோட்சத்தை நாட வைப்பவர். 



ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் : 


ஜோதிடப்படி அவருடைய மகன் இவர், இவருடைய மகன் இவர் என்று சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி சரியாகக் கூறுவதில்லை. இங்குள்ள ஆய்வாளர்களிடமும் அதற்கு சரியான பதிலில்லை.

ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த காலங்களில் அவர்களது பணி சிறப்பாக இருக்காது என்பதை கண்டறிந்து அவ்வாறு செய்துள்ளனர். 

அதுபோல ராகுகாலம், எமகண்டத்திலும் பணியாளர்களின் நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அந்த சமயங்களில் தான் வாக்குவாதம் வருவது, பிரச்சினைகள் பெரிதாவது என்று நேரிடுகிறது. 

இதை வைத்துப் பார்க்கும்போது ராகுகாலம், எமகண்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரம். அதாவது திங்கட்கிழமை என்றால் ஆறு ஏழரை ராகு காலம் என்று கணித்து வைத்திருக்கிறார்கள். 

விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாக பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள்.

மருத்துவர் செரியன் என்பவர் ராகு காலம், எமகண்டங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்வதில்லை. மேலும் அந்த சமயங்களில் அவர் எதையும் பேசாமல் மெளனமாக இருந்துவிடுவாராம்.

அவர் ராகு காலம், எமகண்டங்களில் செய்த சில அறுவை சிகிச்சைகள் தோல்வி அடைந்ததை அவரே கண்காணித்து அந்த முடிவினை எடுத்துள்ளார். இத்தனைக்கும் அவர் கிறிஸ்துவர்தான். 

ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். 

வாகனத்தை இயக்கும்போது கூட, ராகு கால, எமகண்ட நேரங்களில் அசுரத் தனமாக வண்டியை இயக்குவோம். சந்து பொந்துக்கு செல்வது போன்றவை நேரிடும். கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தூண்டும் நேரங்கள் அவை. அதனால் தான் அந்த நேரங்களில் பொறுமையாக செய்வது நல்லது, அமைதியாக இருப்பது நல்லது என்று கூறுவார்கள். 

வழக்கமான பணிகளை நாம் அந்த நேரங்களில் தொடரலாம். ஆனால் எந்த புதிய வேலையையும் அந்த நேரத்தில் துவக்குவது நல்லதல்ல. ஒரு நடிகர் தனது பட பூஜையை ராகு காலத்தில் துவக்கி, பூனையை குறுக்கே போக விட்டு, விதவைப் பெண்ணை குத்துவிளக்கேற்றச் சொல்லி எல்லாம் செய்தார்.

ஆனால் அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் பல்வேறு பிரச்சினைகள், வழக்குகள் என பலவற்றை அவர் சந்தித்தார். 

ஒவ்வொன்றும் அதற்கான பலனை நிச்சயம் அளிக்கும். 
ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை?

ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.

Wednesday, 9 October 2013

Tragedy in the Snake's shadow (நிழல் நிஜமாகிறது)


Impact of Mysterious Rahu


Rahu and Ketu are shadowy planets. The two points where the orbit of the Moon crosses the ecliptic are known as Rahu and Ketu. Ecliptic is apparent path of the Sun as seen from the earth. Rahu is called ascending node of the Moon in the western astrology. Ketu is called the descending node of the Moon in the western astrology.
The close or exact influence of Rahu and Ketu in the birth chart is very significant for the person. Rahu and Ketu are generally unfavorable planets. They bring challenges during their sub periods or prolonged transit influence. They make the person vulnerable to anxiety, over-ambitiousness, sudden setbacks, undiagnosed health problems, food poisoning, loss of reputation, allergic disorders, losses through cheating, inflammation, professional setbacks, depression, strains in business relationship, persisting infections, losses through risky or speculative ventures, make you vulnerable to sexually transmitted diseases, problems of black magic / evil spirits, litigation, sudden mishaps and problems in marital relationship.
Benefic Results During Rahu's Sub-Periods
Rahu gives good results only if it is placed in the good houses i.e. other than the dusthana houses (sixth, eighth and twelfth houses), is not closely conjunct with any planet or mid point of the house or closely aspecting any other planet and its dispositor is strong. Rahu makes the person ambitious and activates him/her to put in more and more efforts for achieving his/her goals. The close influence of Rahu on some planet enhances / propels the results of that planet.
In Systems' Approach, degree rising in the ascendant is taken as the degree indicating most effective point of each house.  Rahu's location within 5 degree of the ascending degree in any of the houses is taken as close conjunction with the most effective point and it afflicts the houses of placement and aspects.  Well placed Rahu in good houses, without causing affliction, and with strong dispositor, shows good results towards materialistic pursuits in its sub-periods.  However, sometimes, the materialistic blessings of Rahu are lost after initial gains. When placed in the ascendant, it activates the person and makes him dynamic and desirous of earning more and more without bothering about the ethical code of the society he is living in.  In the second house, it makes the native a politician trying to acquire status in whatever field he is placed in.  In the third house, it increases initiative and courage and indicates materialistic prosperity to younger brothers. 
In the fourth house, it impels one to acquire new assets, vehicles and use of even unfair means for advancement of education and professional matters.  In the fifth house, it indicates gains from speculations and good intuitive faculty.  In the seventh house, it indicates celebration of marriage, happiness in marriage, relations out of marital bond and visiting foreign places.  In the ninth house, it indicates involvement in religious functions and desire for moksha without the corresponding sincere efforts.  In the tenth house, it makes a person diplomatic, a good public relations man, a go-getter capable of achieving his ends through the use of vices.  In the eleventh house, it gives unearned gains through corrupt/manipulative tendencies.
The close conjunction/aspect of Rahu to a functionally benefic, well-placed and strong planet highly activates the significations of the planet in question and gives rise to short lived phenomenal results.
Affliction of Planets
When Rahu forms close conjunction/aspect with natal planets, it causes affliction and destroys the significations of these planets.  The harm is less when the afflicted planets are strong and more when they are weak.  When the planets are weak, badly placed and closely afflicted by Rahu, it is indicative of tragic happenings.  When the conjunction/ aspect is within a longitudinal difference of one degree, the problems surface in the first sub-period of Rahu or the planet afflicted by Rahu.  When this affliction is within five degrees on either side, the effect is felt at a young age during the sub-period of the afflicted planet or of Rahu. 
When the conjunction is wide, the impact is felt only in old age.  When Rahu afflicts the Sun, it indicates problems to father, son, husband, heart, blood pressure and character.  Rahu's affliction to Venus indicates problems to wife, marital relations, kidney, partnerships and educational pursuits.  Rahu's affliction of the Moon is indicative of a sick and troubled mind, malfunctioning of heart, problems to mother and wife and property disputes.  One has to go to far off places and suffer from home-sickness.  Rahu's affliction of Mars causes wealth, inflames one's dynamism and courage, diseases of impurity of blood and trouble to younger brothers.  Rahu's affliction of Mercury causes skin disease, nervous problems, paralysis, lunacy, intestinal malfunctioning, constipation and confusion.   Rahu's affliction of Jupiter causes malfunctioning of pancreas and liver, reduces hearing power, makes one selfish and immoral, gives problems to sons, husband, and father and gives a bad reputation.  Rahu's affliction of Saturn is indicative of labor problem, bad reputation, rheumatism, spondylitis, excess cough and breathing problems.  The physical ailments are more pronounced if the lord of the ascendant is weak, badly placed and afflicted.
Results of Rahu When Not Afflicting in Dusthanas
Rahu when placed in the sixth house during its sub-period indicates undiagnosed diseases, intestinal problems, losses through theft and fire, problems in job/profession and inharmonious relations with other family members.  When placed in the eighth house, during its sub periods, it causes deaths in the family, losses, disintegration of families and obstructions to good living. Rahu in the twelfth house makes one vulnerable to addiction and gambling, gives threat of imprisonment, losses and expenses, problem of hypertension, thoroughly troubled domestic peace when near the most effective point. It causes health problems, losses through cheating, tendency for excessive indulgence in materialism, mental unrest and problem to parents.  
Results of Rahu/Ketu When Afflicting in Dusthanas
Rahu/Ketu when placed close to the most effective point of any of the malefic houses or causing severe affliction(s) to some other natal planet(s), its results become very severe. During their sub-periods besides afflicting the significations of the planet(s) afflicted, they indicate undiagnosed and prolonged health problems, intestinal problems, losses through theft and fire, problems in job/profession, inharmonious relations with other family members, death(s) in the family, disintegration of families, problem to parents, obstructs living comforts, one becomes vulnerable to addiction and gambling, threat of imprisonment, losses and expenses, problem of hypertension, thoroughly troubled domestic peace, losses through cheating, tendency for excessive indulgence in materialism, encroachments, anti social and anti-law deeds, mental unrest and problems with law. 
AFFLICTING RAHU AT MOST EFFECTIVE POINTS OF VARIOUS HOUSES
When Rahu afflicts closely the mid-point of a house which contains a mooltrikona sign and the dispositor is weak, impact in various houses is as under :
First House: 
Physical retardation and acute health problems, problems in marital life, problems to  male children and father.
Second House:
Disintegration of family, divorce, loss of status, wealth and reputation, intestinal problems and problems to father.
Third House:
Sinful deeds, lying, disturbed marital life, retarded physical growth, problems to father and earnings through foul means.
Fourth House:
Destroys domestic peace and professional growth, causes accidents and inauspicious happenings, wasteful expenses and losses.
Fifth House:
Loss of semen, lack of progeny, health problems to father, elder brother and self.  Earnings through undesirable means.
Sixth House:
Chronic illness, stomach ulcer, acidity, losses through thefts and fire, threat of imprisonment, disputes and disturbed family life.
Seventh House:
Extra marital relationships, ill health to self and spouse, venereal diseases, skin diseases, problems to brothers and resorting to corrupt practices and gambling.
Eighth House:
Accidents, involvement in scandals, family disputes, separation, piles, eye troubles and loss of domestic peace.
Ninth House:
Problems to self, father, children and younger brothers. Makes one totally immoral.  One resorts to vices and gambling.
Tenth House:
Causes termination due to use of corrupt practices, destroys assets, problems of blood pressure and makes the native a liar.
Eleventh House:
Income through corrupt practices, spoils health of spouse and troubled marital relations. Native uses unfair means and operates in a deceptive way.
Twelfth House:
Makes one an addict and gambler, threat of imprisonment, losses and expenses, problem of hypertension, thoroughly troubled domestic peace.
Transit Influence of Rahu
Transit influence of Rahu is more or less indicative of troubles and tensions.  Transit relationship through close aspect/conjunction with weak planet is felt when the longitudinal difference is five degrees and with the grave situation at the time of exact aspect/conjunction.
The tension/trouble starts when the relationship is formed and ends when it separates from the close conjunction/aspect.  In the case of strong and well placed natal/transit planets, the longitudinal distance of conjunction/aspect is of only one degree.  The impact is felt with respect to the following :
1 .    The significations of the houses where mooltrikona signs of the troubled planets are placed.
2.    The general significations of the afflicted planet.
3.    The general significations of the house where the afflicted planet is placed.
4.    The general significations of the house of conjunction and the houses aspected if the conjunction is with the 
      most effective point of a house.
The impact is greater when Rahu causing transit conjunction is placed in dusthanas and when the planets/houses involved are weak both in natal and transit charts.
Rahu's close involvement with Venus gives an urge for carnal pleasures in the early stages of life and enjoyments through smoking and drinking, intoxication through other means, etc.  Rahu's close involvement with the most effective points of the seventh, third, fifth and eighth houses takes one to premarital carnal pleasures and love affairs only for physical gratification.   Rahu's close affliction to both Mercury and the weak Moon in the eighth or twelfth houses makes one a drug addict. I am sure readers will derive benefits from this in delineating the postures of Rahu in a particular nativity more clearly.
RAHU & SPECULATION
Gains are ruled by the eleventh house. Gains through investments are ruled by the fifth house.

For these two aspects there are no alternate houses and if there is no mooltrikona sign then the houses are studied for other influences on these houses through occupation and aspects.

Speculation is ruled by Rahu. Its intensity may be increasing with increasing of the influence of Rahu in a particular chart. The simultaneous impact of Mercury may inovlve the person in speculation of stocks and shares. The simultaneous impact of Mars may involve the person in speculation in properties.

Rahu rules greed, speculation, gambling, impersonification, misrepresentation, selfishness, cheating, manufacuring of spurious articles, copying and manipulations. The gains obtained employing the means signified are short lived and bring losses ultimately giving lot of pain to the person.

The influence of Rahu gives risk orientation / gambling tendancy. Sometimes, it is calculated risk and sometimes it is blind risk. The influence on badly placed planets gives blind risk.

Houses 1st, 3rd, 5th and 10th are connected with the actions of the person. So, its influence on planets ruling the actions gives tendency for risk in life. On positive side the impact is enterprising and expansion oriented.

The intense influence of Rahu can be wide pervading due to close conjunction/aspect and can be through the second, third, fourth, fifth, tenth and eleventh houses besides the ascendant.

If the fourth, second, third, fifth and tenth houses are strong then the gains obtained by the person may be comparatively for longer duration but are ultimately lost.

RAHU TRANSITTING ITS OWN NATAL POSITION

When transit Rahu transits its own natal position or the natal Ketu position it generally causes difficulties and obstructions. The difficultives and obstructions can be grave if:
(i) its location is near MEP
(ii) its movement is stationary.
(iii) dispositor is weak
(iv) if the placement is in the malefic house(s)

Thanks : yournetastrologer.com

Monday, 7 October 2013

Life is an accident- Recover it. வாழ்க்கை ஒரு விபத்து- மீட்டெடுங்கள் !



எங்கேயும் எப்போதும் 

வாழ்க்கையில் விபத்து இருக்கலாம். ஆனால் விபத்தில் வாழ்க்கை இருக்க கூடாது.

 ஒரு ஆணும் ஒரு பெண்ணும் விபத்தாக மோதிக்கொள்ளும் போது இன்னொரு ஆணோ / பெண்ணோ வேறு ஒரு ஆணிடமோ / பெண்ணிடமோ விபத்து ஏற்படுத்தப்போகும் அடித்தளம் அமைகிறது. 

இங்கே மனித உடல்களை உயிருள்ள வாகனங்களாக கற்பனை செய்து பாருங்கள். இந்த கண்ணுக்கு தெரியும் வாகன உடல்களின் அதன் ஓட்டுனராக ஆத்மா திகழ்கிறது ! 

ஒரு ஓட்டுனரின் நடத்தையில் தான் அவன் வாகனத்தின் ஆரோக்கியம் இருப்பது போல, ஆத்மாவின் ஆரோக்கியத்தில் தான் உடலெனும் வாகனத்தின் திறனும் இருக்கும். 

தூய எண்ணங்கள் தான் உடலெனும் வாகனத்திற்கு எரி பொருளாகிறது. எண்ணங்கள் போன்ற எரி பொருள் தூய்மையானால் உடல் வாகனம் சரியான திறனுடன் இறக்கும் அதிக பட்சம். 



எண்ணங்கள் கலப்பட மானால், எரிபொருள் கலப்படம் போல விளைவு வாகனம் சீர்கேடாகும். 

ஒரு விபத்தில் வந்த 

ஒரு உயிருள்ள வாகனம் 

மற்றொரு விபத்தினை நிகழ்த்த

ஒரு உயிரற்ற வாகனத்தின்

மீது அமர்ந்து செல்கிறது! 


அடியார்
குருதேவா, முன்பு இருந்ததை விட தற்போது வாகன விபத்துக்கள் நிறைய ஏற்படுகின்றனவே. இதை எப்படித் தவிர்ப்பது என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

சற்குரு
மனித சமுதாயத்தின் மேல் உனக்குள்ள ஆர்வத்தைக் குறித்து மிக்க மகிழ்ச்சி. தற்காலத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் மக்களின் உயிர் இழப்பும் அதிகமாகி வருகின்றது என்பது உண்மைதான். வாகனங்களின் எண்ணிக்கை, சாலை அமைப்பு, இரவு நேரப் பயணங்கள், ஓட்டுநர்களின் அசிரத்தை, தூக்கம், மது போன்ற பல காரணங்களால் வாகன விபத்துக்கள் அதிகமாகி இருந்தாலும் அடிப்படைக் காரணங்களைப் பற்றி நாம் ஆராய்வோம்.

வாகனம் என்பதற்குப் பொருள் என்ன? ’வாகனம்’ என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் ஒரு காரியத்தில் உதவியாக இருப்பதும், ஒருவருக்குத் துணையாக இருப்பதும் வாகனமாகும். கோயிலில் மூலவருக்கு வாகனம் அமைந்திருப்பது இந்தக் காரணத்திற்காகத்தான். மூலவரின் அனுகிரக சக்திகளை வழிபடுவோரின் தகுதிக்கு ஏற்ப முறைப்படுத்தித் தருவதே வாகனமாகும். எம்பெருமான் சிவபெருமானுக்கு ஒரு கோடி வாகனங்கள் உண்டு. ஒரு கோடி என்பது வெறும் வாகனங்களின் எண்ணிக்கை அல்ல. ஒரு கோடி விதமான வாகனங்கள். காளை, தேர், ன்னம் என்று ஒவ்வொரு வகையிலும் உள்ள வாகனங்களோ கோடி கோடி. மனிதர்கள் எதிர்காலத்தில் வாகனங்களால் அனுபவிக்கும் துன்பங்களைக் கோடிட்டுக் காட்டி, அவர்கள் அத்துன்பங்களிலிருந்து மீள்வதற்காகவே சிவபெருமான் கோடிக் கணக்கான வாகனங்களில் பயணம் செய்து அந்த வாகனங்களை எல்லாம் தூய்மைப்படுத்தி உள்ளார்.

கணவனைப் பிரிந்து பாதுகாப்பின்றி வாழும் பெண்கள் தஞ்சை பெரிய கோயிலில் கருவூர் சித்தர் ஜீவாலயத்தின் பின் அருள்புரியும் பத்தினி தெய்வத்தை வணங்கி வந்திடில் நல்ல பாதுகாப்புடன் வாழ சித்தர்கள் துணை நிற்பர்.
சிவபெருமானுக்கு அமைந்த வாகனங்கள் எல்லாம் நாம் நினைப்பது போல சாதாரணமான பசு, மான், மயில் என்பவை அல்ல. பல ஆண்டுகள், பற்பல யுகங்கள் தவம் இயற்றி எம்பெருமானுக்கு வாகனமாக வேண்டும் என்று வேண்டிய தவசீலர்களையே சிவபெருமான் வாகனமாக ஏற்று அருள்பாலித்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று உலகில் நாம் காணும் அனைத்து வாகனங்களும் சிவன் சொத்தே என்ற எண்ணத்தை ஒரு மனிதன் கொண்டாலே போதும் அதுவே வாகன விபத்துக்களை பெருமளவில் குறைத்து விடும். இதைத்தான் நமது குருநாதரும் சித்த குரு வேத சூக்த மாமந்திரமாக ’எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே, அருளாளா அருணாசலா’ என்று உரைத்துள்ளார். கோயிலில் நாம் வணங்கும் நந்தி மூர்த்திகள் உணர்த்தும் பல உண்மைகளில் இதுவும் ஒன்று.
திருவீழிமிழலை ஈசனைச் சுமக்கும்
பூத வாகனம்
வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆயுத பூஜை திருநாளில் வாகனங்களைக் கழுவித் துடைத்து வணங்குவதைப் போல, தினமுமே வாகனங்களைத் துடைத்து, அடிக்கடி கழுவி சுத்தப்படுத்தி, அதையும் நமக்குத் தேவையான விதங்களில் துணை புரியும் ஒரு ஜீவனாக, உற்ற தோழனாகக் கருதி வணங்கி வந்தால் வாகனங்களும் நமக்கு றுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாகனப் பராமரிப்பைச் சிறுவயதிலேயே கற்றுத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்.

சிறு குழந்தைகளை முதுகில் ஏற்றி விளையாடும் உப்பு மூட்டை விளையாட்டு மூலமாகப் பெற்றோர்கள் பல நல்ல எண்ணங்களை குழந்தைகள் மனதில் முற்காலத்தில் விதைத்து வந்தனர். குழந்தையை அப்பா, அம்மா முதுகில் சுமப்பது மனிதனே மனிதனைச் சுமப்பது என்ற நிலையாகும். இது குபேர தத்துவத்தை விளக்குகிறது. குபேரனுக்கு மனிதனே வாகனமாக அமைந்திருக்கிறான். ’தந்தைதான் உனக்கு வழிகாட்டும் குபேரன்’ என்ற உண்மையையும் குழந்தைகளுக்கு இந்த உப்பு மூட்டை விளையாட்டு சொல்லித் தருகிறது. மனிதனைக் குபேரனுக்கு வாகனமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியவரே சித்ர குப்தர் ஆவார்.

பலரும் தற்காலத்தில் சித்ர குப்தரை ஒரு சாதாரண கணக்குப் பிள்ளை என்று நினைத்து விட்டார்கள். மனிதர்களுடைய நல்வினை, தீவினை அனைத்தையும் முழுமையாகக் குறித்து வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்லவே. மிகவும் கடினமான ஒரு பணி. இந்தக் கடினமான பணியில் அவர் இதுவரையில் ஒரு சிறு தவறு கூடச் செய்ததில்லை என்று நீங்கள் உணர்ந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு நொடிப் பொழுது கவனக் குறைவு, சின்னஞ் சிறு தவறுகள்தான் பெருத்த வாகன விபத்துகளுக்குக் காரணமாகின்றன. ஓட்டுநர்களும், வாகனத்தில் பயணம் செய்பவர்களும் தவறே இழைக்காத சித்ரகுப்த மூர்த்தியை வணங்கி வந்தால் வாகன விபத்துகள் குறைய ஏதுவாகும்.

வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, தாங்கள் எடுக்கும் முடிவுகள் பல நுõறு, ஆயிரம் பேருக்கு நன்மையோ தீமையோ விளைவிக்கும் பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், எல்லாத் துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகள் இவர்கள் அனைவரும் சித்ர குப்த மூர்த்தியை வணங்கி வந்தால் தங்கள் தவறுகளால் மக்களுக்கு எந்தவித துன்பமும் நேராமல் காத்துக் கொள்ளலாம். வருடம் ஒரு முறை சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே சித்ர குப்தரை வழிபடும் முறை தற்போது நிலவி வருகிறது. உண்மையில் மக்கள் னைவரும் தினமும் வழிபட வேண்டிய மூர்த்திகளுள் சித்ர குப்தர், எம மூர்த்தி, வாஸ்து மூர்த்திகளும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய அன்றாட தவறுகளைத் திருத்திக் கொண்டு தான் யார் என்ற ஆத்ம விசாரத்திற்கு வித்திடுவதே ஸ்ரீசித்ர குப்தர் வழிபாடு.
ஸ்ரீஆயுர்தேவியை வழிபடும்
ஸ்ரீபாலினன் சித்ர குப்த மூர்த்தி
சித்ரகுப்தரின் அருளைப் பெற விரும்புவோர் பௌர்ணமி தினங்களில் மலைத் தலங்களில் கிரிவலம் வந்து தேங்காய் புட்டு தானம் அளித்தல் சிறப்பாகும். புட்டு மேல் தேங்காய் ஏறி நிற்பது மனிதனை வாகனமாகக் கொண்ட குபேரனுக்கு ப்ரீதியாக அமைந்து இது குபேரனுடைய அனுகிரகத்தையும், சித்திரகுப்தரின் அனுகிரகத்தையும் ஒருங்கே பெற்றுத் தரும் சிறப்பான வழிபாடாக அமைகிறது.

சிலருக்கு அடிக்கடி நன்றாக பசிக்கும். ஆனால், ஒரு உருண்டை உணவு ஏற்றவுடன் பசி அடங்கி விடும். சிலருக்கு எவ்வளவு நேரமானாலும் பசியே இருக்காது. அதே சமயம் அளவுக்கு மீறிய சோர்வும், மயக்கமும் ஏற்படும். உணவு சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்காது. இத்தகைய துன்பங்களுக்கு காரணம் வயிற்றில் சுரக்கும் கங்கண நீர் என்னும் தீர்த்தமாகும். இந்தக் கங்கண நீருக்கு அதிபதியே சித்திர குப்தர் ஆவார். இவ்வாறு வயிற்றுக் கோளாறு, பசி மயக்கத்தால் துன்பம் அடைபவர்கள் வெள்ளிக் கிழமைகளிலும், பௌர்ணமி நாட்களிலும் தேங்காய் புட்டு தானம் செய்து வந்தால் நலம் அடைவர். சமைத்த உணவை ஸ்ரீஆயுர் தேவி படத்தின் முன் வைத்து ஸ்ரீஆயுர் தேவி மூல மந்திரத்தை 108 முறைக்குக் குறையாமல் ஓதி தானம் செய்து வந்தால் தானத்தின் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.\

குழந்தைவேல், கூத்தப்பன், குமரன் என்று ’கு, கூ’ என்ற எழுத்துக்களை முதல் எழுத்தாக தன்னுடைய பெயரில் கொண்டவர்கள் அவசியம் வணங்க வேண்டிய மூர்த்தியே சித்திர குப்தர் ஆவார். திருச்சி லால்குடி அருகே உள்ள கூகூர் என்னும் சிற்றுõரில் உள்ள சுயம்பு சிவலிங்க மூர்த்திக்கு ஒரு யுகத்தில் சித்திரை மாத சதய நட்சத்திர தினத்தன்று சந்தனம் அரைத்துத் தந்து கூகூர் சிவத்தல மகிமையை உலகிற்கு முதன் முதலில் உணர்த்தியவரே சித்திர குப்த மூர்த்தி ஆவார். தன்னுடைய பணியில் தவறுகளே ஏற்படாத அனுகிரகத்தைப் பெற சித்திர குப்த மூர்த்தி தொடர்ந்து பல யுகங்களுக்கு கூகூர் சிவலிங்க மூர்த்திக்கு கையால் சந்தனம் அரைத்துத் தரும் கைங்கர்யத்தை ஏற்று நடத்தி வந்தார்.

எனவே, ’கு, கூ’ என்று ஆரம்பிக்கும் பெயரை உடையவர்களும், தங்கள் பணியில், தொழிலில், வியாபாரத்தில் வறுகள் ஏற்படா வண்ணம் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் கூகூர் சிவலிங்க மூர்த்திக்கு மாதந்தோறும் சதய நட்சத்திர நாட்களிலும், வளர் பிறையில் வரும் வெள்ளிக் கிழமைகளிலும் கையால் அரைத்த சந்தனத்தைச் சார்த்தி வழிபடுதலால் நல்ல முன்னேற்றத்தை அடைவர்.

அரசமரம், ஆலமரம், வேப்ப மரம் போன்ற தெய்வீக மரங்களை சாலை ஓரங்களில் வளர்த்து, பராமரித்து வந்தால் இவற்றிலிருந்து வெளியாகும் நற்குண கதிர்கள் பரவெளியைத் தூய்மைப்படுத்தி வாகன விபத்துக்கள் ஏற்படா வண்ணம் காக்கும்.
காலத்தின் அருமையை உணர வைப்பதும் வாகனமாகும். நாம் தினமும் அலுவலகம், பள்ளி, விழா நிகழ்ச்சிகள், திருமண வைபவங்கள், தேர்வுகள் போன்ற முக்கியமான இடங்களுக்கு, பணிகளுக்கு கால தாமதம் ஆகாமல் குறித்த நேரத்திற்குள் செல்ல நாம் முழுவதுமாக நம்பி இருப்பது வாகனங்களைத்தானே. ஒரு பஸ் ரிப்பேர் ஆகிவிட்டால் எத்தனை பிரயாணிகள் அடுத்து ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடி விடுகிறார்கள் என்பதை தினமும் கண் கூடாகக் காண்கிறோமே. நாம் காலத்தைச் சரியாகப் பயன்படுத்த உதவுவதில் வாகனங்களுக்கு உள்ள பங்கை நன்கு புரிந்து கொண்டு வாகனங்களை இனியாவது மதித்து நடந்தால் அவை நம்மைப் பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும் உற்ற ண்பனாக பணியாற்றும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அடியேனுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஒரு முறை முக்கியமான அலுவல் காரணமாக தாம்பரத்திலிருந்து மைலாப்பூர் நோக்கி ஒரு பழைய காலத்து பியட் காரில் வந்து கொண்டிருந்தேன். குரோம்பேட்டை தாண்டி பல்லாவரம் நெருங்கிக் கொண்டிருக்கும்போது கார் நிற்கும்போல தோன்றியது. காரணம் என்னவென்று பார்த்தால் காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. அடியேன் அவசரமாக உடனே மைலாப்பூர் செல்ல வேண்டிய நிலை. அந்தச் சூழ்நிலையில் கார் பகவானிடம் வேண்டிக் கொண்டேன். ’கபாலி, எப்படியாவது நீதான் காப்பாற்ற வேண்டும். மைலாப்பூர் வரை ங்களை கொண்டு போய்ச் சேர்த்து விடு.’ என்று மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லியபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் கார் மைலாப்பூர் கபாலி கோயில் தெப்பக்குளம் வரை வந்து அங்கே நின்று விட்டது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் பல்லாவரத்திலிருந்து மைலாப்பூர் வரை ஒரு பழைய பியட் கார் நம்மைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்றால் வாகனங்கள் நமக்காக எந்த அளவுக்குச் சேவை புரியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இனியாவது வாகனங்களை ஜடப் பொருள்கள் என்று எண்ணாதீர்கள். அவையும் உயிருள்ள ஜீவன்களே. நமக்குச் சேவை செய்ய அல்லும் பகலும் காத்திருக்கும் பைரவ மூர்த்திகள்.



Thanks : www.kulaluravuthiagi.com

Tuesday, 1 October 2013

WWF (Wolf Worship Friendship) ஓநாய், வழிபாடு, சிநேகம்


ஓநாயும் மனித வாழ்க்கையும் 




அடியார்
குருதேவா, எல்லா மிருகங்களுக்கும் தெய்வீகச் சிறப்புகள் உண்டு என்று பலமுறை அருளியுள்ளீர்கள். ஓநாய்க்கு என்ன தெய்வீக இயல்புகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

சற்குரு
எல்லாவற்றையும் அடியேனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட நீங்களே முயன்று ஆத்ம விசாரம் செய்து பார்த்த பின்னர் ஒன்றுமே உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் அதன் பிறகு ஆசானை நாடுவதே முறை. இருந்தாலும் நீங்கள் கேட்டதால் இப்போது உங்களுக்குச் சொல்லக் கடமைபட்டுள்ளேன்.

உலகில் உள்ள எல்லா மிருகங்களுக்கும், ஏன் ஒவ்வொரு செடி, கொடி, தாவரம், புல், பூண்டிற்கும் கூட சிறப்பான இறைத் தன்மை உண்டு. நாம்தான் அந்த இறை இயல்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதில்லை.

பலவிதமான கோர்ட் வழக்குகளால் துன்புறுவோர் திருவாசி ஸ்ரீமாற்றுவாதீஸ்வர சுவாமியை வெள்ளை நிற முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்கி வந்தால் சுமுகமான நிலை ஏற்படும்.
ஸ்ரீவித்யா லோகத்தில் உறையும் 43 கோடி தேவிகளில் ஒரு தேவியே கோடரி மாதேவி என்ற ஓர் அற்புதமான தேவி ஆவாள். எந்நேரமும் பஞ்ச கன்யா தோத்திரத்தை ஓதி அதை பெண் குலத்திற்காக அர்ப்பணித்து பெண்களின் தீர்க்க சுமங்கலித்துவம், மாங்கல்யத்துவம், மங்களத்துவம் இவற்றிற்கு வழி வகுப்பவள். கணவன் மனைவி உறவு, கணவன் வீட்டாரிடம் நன்னடத்தை, சமுதாயத்தில் பாதுகாப்பு, நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை இது போன்ற பல வரப் பிரசாதங்களை பெண் குலத்திற்காக அள்ளி வழங்குபவளே கோடரி மாதேவி. இந்தத் தேவியின் வாகனம் ஓநாய். ஓநாயை முறையாக வழிபட்டால் கோடரி மாதேவியின் அருளைப் பெற்று பெண் குலம் பாதுகாப்புடன் வாழ முடியும்.

சீதா பிராட்டி அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்தபோது அவளுடைய காவலுக்காக இராவணன் வைத்திருந்த அரக்கிகள் எப்போதும் கடுமையான வார்த்தைகளையும், வசைச் சொற்களையும் சீதா தேவியிடம் சொல்லி வந்தார்கள். இதனால் மிகவும் மனம் வருந்திய சீதா தேவி அரக்கிகள் நல்வார்த்தை சொல்வதற்காக கோடரி தேவியின் வாகனமான ஓநாயை வழிபட்டு வந்தாள். இதுவே நாளடைவில் அரக்கிகளுக்கு நல்ல மனமாற்றத்தைக் கொடுத்து, பல அரக்கிகள் சீதா தேவியுடன் நட்புடன் பழக வழிவகுத்தது.

தற்காலத்தில் கடுமையான வார்த்தைகள் பேசும் முதலாளிகள், மேலதிகாரிகள், மாமனார், மாமியார், நண்பர்கள், உறவினர்களிடையே வாழ வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக பெண்கள் கோடரி மாதேவியின் வாகன மூர்த்தியான ஓநாயை வழிபட்டு வந்தால் கடுஞ் சொல், தகாத வார்த்தைகள், வசை பாடுவோர் மனம் திருந்தி சுமுகமாகப் பழகும் நிலை உருவாகும். 

அட்லாண்டிக் நாகரீகத்தில் ஸ்ரீஆயுர்தேவி வழிபாடு மேலோங்கி விளங்கிய காலத்தில் எகிப்திய நாகரீகத்தில் ஓநாய் வழிபாடு சிறப்புற்று விளங்கியது. காலப் போக்கில் எகிப்திய நாகரீகத்தில் ஓநாய் வழிபாட்டுப் பலன்கள் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டøமையால் அதன் வழிபாடும் குன்றியது.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எவ்வாறு தங்களுக்குள் பரஸ்பர அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதை கோடரி தேவி வழிபாடு உணர்த்துகிறது. உதாரணமாக சிரிப்பு என்ற குணத்தை எடுத்துக் கொள்வோம். தாவரம், மிருகம் என எந்தக் குலத்திற்கும் இல்லாத ஓர் அற்புத பரிசே இறைவன் மனித குலத்திற்கு அளித்துள்ள சிரிப்பு என்ற வரப் பிரசாதமாகும். இதை மனித குலம் சரியாகப் பயன்படுத்தி வந்தாலே போதும். வேறு எந்த உபாயமும் இல்லாமலேயே குடும்பத்திலும் சமுதாயத்திலும் அமைதி பெருக்கெடுக்கும்.

காலையில் எழுந்தவுடன் கணவன் மனைவியைப் பார்த்து தன்னுடைய ஆறு பற்கள் தெரியும்படி சிரிக்க வேண்டும். மனைவி தன்னுடைய பற்களைக் காட்டாமல் கணவனைப் பார்த்து புன்முறுவல் பூக்க வேண்டும். தற்போது மோனாலிசா சிரிப்பு என்று சொன்னால் நீங்கள் உடனே புரிந்து கொள்வீர்கள். ஓநாய் தான் சந்தோஷமாக இருக்கும்போது ஆறு பற்களைக் காட்டும். எனவே, கணவன் மனைவியைப் பார்த்து தன்னுடைய ஆறு பற்கள் தெரியுமாறு சிரிக்கும்போது கோடரி மாதேவியின் அனுகிரகத்தால் கணவன் மனைவியரின் அன்புப் பரிமாற்றம் அங்கே பரிணமிக்கின்றது. குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் இந்தக் காலைச் சிரிப்பை இனி நீங்கள் பரிமாறிக் கொண்டு அதன் பயனை உணர்ந்து பாருங்கள். கலியுக பெண்கள் கணவன்மார்களின் ஆசீர்வாதத்தையும், அன்பையும் பெறுவதற்காக இன்றும் கோடரி மாதேவி தன் கணவனை சிரித்த முகத்துடன் எப்போதும் நோக்குகிறாள் என்பதே சித்தர்கள் உணர்த்தும் ரகசியம்

இரவில் உறங்குவதற்கு முன் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும் வண்ணம் எதிர் எதிரே படுக்கையிலோ அல்லாது தர்பை, மாம்பலகை போன்ற ஆசனங்களிலோ அமர்ந்து கொள்ள வேண்டும். எவ்வித உரையாடலும் இன்றி அமைதியாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமேனும் இந்த இல்லற பூஜையை நிகழ்த்தி வந்தால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெருக ஏதுவாகும். குடும்ப ஒற்றுமையை பேணிக் காக்கும் அற்புத வழிபாடு.