photo

photo
Venkatesh.A.S

Friday 16 August 2013

Lust, Love, Marriage!




காமம், காதல், திருமணம்

ஒரு சுவாரஸ்யமான கதை :

காதல் - திருமணம் - ஞானம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜா செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா."

"ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக்கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்தி செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?"

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

மேலே சொல்லப்பட்ட கதையில் காதலை பார்த்தோம், திருமணத்தை பார்த்தோம். ஆனால் "காமம்" - இது இங்கே எப்படி வந்தது? 

மேலே உள்ள கதையிலேயே  ஒரு சிறு மாற்றம் ....பார்ப்போம்.

அதாவது ரோஜாச்செடி என்பது இங்கே "காமத்தை" குறிக்கும் வினையாகும். 

சீடன் மனதில் காமம் குடியிருக்கும் போது ஒன்றை விட ஒன்று அழகாகத்தான்  தெரியும். குருவின் நிபந்தனைப்படி உயரமான செடியை தேடும் போது ஒன்றை  ஒன்று மிஞ்சுவது போல் அவனுக்கு தெரிந்து பின்னர் எதுவுமே உயரமில்லை என தெரியும் போது ஒன்றையும் அவனால் பறிக்க முடியவில்லை. 

இந்த காமம் என்பது அதிகமான சுயநலம் கொண்டது. உடன் பேராசையும் நிறையவே கொண்டது. இந்த நிலைமை வளர்ந்து விட்டால் பின்னர் "விரக்தி "
தான் மிஞ்சும். இன்னும் நிலைமை முற்றி விட்டால் "பைத்தியம்" கூட பிடிக்கும். 

அடுத்தது "காதல்" , இதில் சுயநலம் இருக்காது, பேராசை இருக்காது. ஒன்றை ஒன்று அழகில் மிஞ்சினாலும், தனக்கு உரியதை விட வேறொன்றில் மனது லயிக்காது. "பூரண காதலில் " கட்டுப்பாடு இருக்கும். இதில் சிறிது காமம் இருக்கலாம். 

அதாவது காதலில் காமம் இருக்கலாம், ஆனால் தவறி கூட காமத்தில் காதல் இருக்கவே கூடாது. அது நிலைக்காது. 

இதனால் தான் சீடன் தனக்கு எல்லா பூக்களும் அழகாக தெரிந்தாலும் குருவின்  நிபந்தனைப்படி ஒரு பூவுடன் திருப்தி அடைகிறான். இது தான் உண்மையான காதல்.  இதன் பரிணாம வளர்ச்சி "திருமணம்" எனலாம். 


இப்படி இந்த காமம், காதல், திருமணம் இவற்றை சரியாக புரிந்து கொண்டு விட்டால் "ஞானம்" வந்து விட்டதாக எனலாம். இது தான் ஞானத்தை அடையும்  சரியான பாதை எனலாம்.

முற்றின காமத்தில் கூட "ஞானம்" பிறக்கும்- மிகவும் அரிதாகவே சில பேருக்கு இது நடக்கும். இதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். உதாரணம் தேனினும் இனிய "திருப்புகழ்" பாடிய குமரனின் பூரண அருள் பெற்ற புண்ணியவர் "அருணகிரிநாதர்". 

கதையின் படி காதலை அறிவோம். காமத்தை ஜெயிப்போம். ஞானத்தை பெறுவோம்.  























No comments:

Post a Comment