அனுபவம் புதுமை!

கவியரசர் கண்ணதாசனின் ஆழமான கருத்து கொண்ட அழகான கவிதை இது. இதை நான் ஒரு நாவலில் (பாலகுமாரனின் "பச்சை வயல் மனது" என நினைக்கிறேன்?) கடந்த 25 வருடங்களுக்கு முன்னரேயே படித்தேன். அப்பொழுது எதோ என்னமோ என சிறிது தான் புரிந்தது, ஆனால் நாட்கள் செல்லச்செல்ல நன்றாகவே புரிந்தது.
என்னை பொறுத்தவரை எல்லாவற்றையும் அனுபவித்து தான் அறியவேண்டும் என்பது இல்லை. சில விஷயங்கள் இதில் சரியாக வராது.
சிலவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம், சிலவற்றை கேட்டு தெரிந்து கொள்ளலாம், சிலவற்றை அடுத்தவர் அனுபவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு முக்கியமாக நல்லவற்றை ஒப்புக்கொள்ளும் மனம் வேண்டும். அதற்க்கு நம்மில் "அகங்காரம்" கூடாது.
ஏனெனில் எங்கு "அகங்காரம்" உள்ளதோ அங்கு "நன்மைகள்" உள்ளே வராது.
No comments:
Post a Comment